தடுப்புச்சுவர் இல்லாத பாலம்

Update: 2024-07-07 16:59 GMT

கோட்டக்குப்பம் அடுத்த ராயப்பேட்டை, ராயபுதுப்பாக்கம், ஆப்பிரம்பட்டு, நெசல் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லக்கூடிய தார் சாலை கடந்த பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ளது. மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் மேடு பள்ளம் தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். ஆப்பிரம்பட்டு மற்றும் நெசல் இரு கிராமங்களுக்கு இடையே உள்ள தரைப்பாலம் பழுதடைந்த நிலையில், தடுப்புச்சுவர் இன்றி உள்ளது. தார்சாலை மற்றும் சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்