சென்னை அடையாறு பகுதியில் பெசன்ட் நகர் முதல் அவென்யூ சாலையின் நடுவில் கடந்த ஒரு மாதமாக கழிவுநீர் கால்வாய் மூடி உடைந்துள்ளது, இதனால் இருசக்கர வாகனத்தில், செல்பவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்து நடக்கிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் கழிவுநீர் கால்வாய் மூடியை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.