கிடப்பில் போடப்பட்ட பணி

Update: 2024-07-07 12:13 GMT

கரூர் என்.எஸ்.கே. நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் நலன் கருதி இப்பகுதியில் சுகாதார வளாகம் அமைக்கப்பட்டது. அந்த சுகாதார வளாகம் சிதிலமடைந்ததன் காரணமாக அதை இடித்த அப்புறப்படுத்திவிட்டு அதே இடத்தில் புதிதாக நவீன சுகாதார வளாகம் அமைக்கும் பணி நடைபெற்றது. இந்த நிலையில் இந்த பணிகள் கடந்த 6 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்