விபத்து அபாயம்

Update: 2024-07-07 11:59 GMT

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா வடகாடு மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலை வழியாக, லாரிகள் மூலமாக அடிக்கடி தேங்காய் உரி மட்டைகளை எந்த விதமான பாதுகாப்பு முறைகளையும் பின்பற்றாமல் அளவுக்கு அதிகமாக ஏற்றி செல்வதால் தேங்காய் உரி மட்டைகள் சாலைகளில் சிதறி விழுகின்றன. இதனால் சில சமயங்களில் சாலைகளில் சற்றே கவனக்குறைவாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தை சந்தித்து வருகின்றனர். இதனால் ஏதேனும் உயிரிழப்பு ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்