தெருநாய்கள் தொல்லை

Update: 2024-07-07 11:37 GMT

புதுக்கோட்டை மாவட்டம், முக்கண்ணாமலைப்பட்டியில் தெருநாய்கள் அதிகமாக கூட்டம் கூட்டமாக ஆங்காங்கே சுற்றித்திரிகின்றன. இதனால் பெண்கள், பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் பெரிதும் அச்சத்துடன் சாலையில் சென்று வருகின்றனர். மேலும் தெருநாய்கள் இருசக்கர வாகன ஓட்டிகளை கடிக்க துரத்துவதினால் அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்