சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்

Update: 2024-07-07 11:36 GMT

புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே புதுகை- தஞ்சை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் இறைச்சிக் கழிவுகள் அதிக அளவில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. மேலும் இந்த இறைச்சி கழிவுகளை உண்ண தெருநாய்கள் வருவதனால் அவை ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொண்டு சாலையின் குறுக்கே ஓடுவதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்