நாய்கள் தொல்லை

Update: 2024-07-07 09:01 GMT

பறக்கை பாத்திமா நகர் குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த பகுதியில் உள்ள தெருவில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. அவை தெருவில் செல்லும் குழந்தைகள், பெண்களை விரட்டுவதும், கடிக்க முயற்சிக்கின்றன. இதனால் நாளுக்குநாள் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து வருவதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாத்திமாநகர் பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முகமது இப்டிக்கர், பாத்திமா நகர்.

மேலும் செய்திகள்