கூடுதல் டெபாசிட் எந்திரம் இல்லை

Update: 2024-06-30 18:02 GMT

கெங்கவல்லி பகுதியில் அரசு, தனியார் வங்கிகள் அதிகளவில் உள்ளன. இந்த வங்கிகளுக்கு தினசரி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். ஆனால் அரசு விடுமுறை நாட்களில் அவசர தேவைக்காக பண செலுத்துபவர்களுக்கு போதிய அளவில் டெபாசிட் எந்திர வசதி இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் அருகில் உள்ள பகுதிகளுக்கு செல்ல வேண்டியது உள்ளது. எனவே வங்கிகள் கூடுதல் டெபாசிட் எந்திர வசதிகளை செய்து தர வேண்டும்.

-முருகானந்தம், கெங்கவல்லி.

மேலும் செய்திகள்