நாய்கள் தொல்லை

Update: 2026-05-31 18:50 GMT

வேலூர் மாநகராட்சி 28-வது வார்டு காகிதப்பட்டறை எல்.ஐ.சி. காலனி தெருக்களில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகளை நாய்கள் கடிக்க வருகின்றன. ஒரு தெருவில் இருக்கும் நாய்கள், மற்றொரு தெருக்களுக்கு வரும்போது அதை அந்த தெரு நாய்கள் ஏற்காமலும், கோழி இறைச்சிக்கடை கழிவுகளை தெரு முனைகளில் போடுவதால் அதை சாப்பிட வரும்ேபாது நாய்கள் சண்டையிட்டு கொள்கின்றன. இதனால் இரவில் தூங்க முடியவில்லை. நாய்களை அகற்ற மாவட்ட மற்றும் மாநகர நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அ.அன்பழகன், காகிதப்பட்டறை, வேலூர். 

மேலும் செய்திகள்