நிழற்கூடம் பயன்பாட்டிற்கு வருமா?

Update: 2024-06-30 17:42 GMT

வெண்ணந்தூர் அடுத்த மின்னக்கல் பிரிவு சாலையில் நிழற்கூடம் உள்ளது. இந்த நிழற்கூடம் தற்போது பயணிகள் பயன்படுத்த இயலாத வகையில் சிலர் மது அருந்திவிட்டு அந்த நிழற்கூடத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் மழை, வெயிலுக்கு ஒதுங்ககூட பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிழற்கூடத்தை பராமரிக்கவும், போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் வேண்டும்.

-சங்கர், நாமக்கல்.

மேலும் செய்திகள்