சென்னை புளியந்தோப்பு, வி.ஒ.சி. நகர் பகுதிகளில் தெரு நாய்கள் மிகவும் அதிகமாக உள்ளது. மேலும் குழந்தைகள், பொதுமக்கள் அந்த வழியாக செல்லும் போது அவர்களை கடிக்க துரத்துகிறது. இருசக்கர வாகனத்தில் செல்பவர்களையும் கடிக்க துரத்துவதால் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் அந்த பகுதிகளுக்கு செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மாநகராட்சி உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.