ஆழ்துளை கிணறு அமைக்கப்படுமா?

Update: 2024-06-30 11:35 GMT

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் வடக்கு தெரு அருகில் நங்காஞ்சி ஆற்றின் ஓரத்தில் அனைத்து சமுதாயத்தினரும் பயன்படுத்தக்கூடிய மயான பகுதி உள்ளது. அரவக்குறிச்சி பகுதியில் ஏதாவது இறப்பு ஏற்பட்டால் இந்த மயானத்தில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வது அல்லது எரியூட்டப்படுவது வழக்கம். இப்பகுதியில் தண்ணீர் வசதி இல்லாததால் இறந்தவர்களின் உடல்களுக்கு சடங்கு சம்பிரதாயங்கள் செய்வதற்காக அதிக தூரம் தண்ணீரை குடங்களில் சுமந்து செல்ல வேண்டி உள்ளது. இந்த மயான பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்தால் அது பயனுள்ளதாக இருக்கும். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்