சாலையோரம் தேங்கும் மழைநீர்

Update: 2024-06-23 12:45 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள மாங்கோட்டை புதுப்பட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு குடியிருப்புகள் உள்ள பகுதியில் சாலையோரத்தில் பெரிய பள்ளம் உள்ளது. மழை பெய்தால் இந்த பள்ளத்தில் தண்ணீர் தேங்கி குடியிருப்புக்குள் புகுந்து விடுகிறது. இந்த பள்ளத்தை சீரமைக்க ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உத்தரவிட்டும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ஆபத்தை விளைவிக்கும் சாலையோர பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்