மதுப்பிரியர்கள் அட்டகாசம்

Update: 2024-06-23 12:16 GMT

கோவையை அடுத்த கவுண்டம்பாளையம் காமராஜர் நகர் 3-வது வீதியில் அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு அந்த பகுதியை சேர்ந்த குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் இரவு நேரத்தில் அங்கன்வாடி மையம் அருகில் அமர்ந்து சிலர் மது குடித்து வருகின்றனர். அவர்கள் காலி பாட்டில்களை அங்கேயே போட்டுவிட்டு செல்வதோடு, சில நேரங்களில் உடைத்து விடுகின்றனர். இது காலை நேரத்தில் அங்கு வரும் குழந்தைகளின் கால்களை பதம் பார்க்கின்றன. எனவே அங்கு மதுப்பிரியர்களின் அட்டகாசத்தை தடுக்க போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்