மதுப்பிரியர்களின் கூடாரமான ஆற்றங்கரை

Update: 2024-06-23 11:52 GMT

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் பகுதி நல்லூர் கிராமத்தில் குடமுருட்டி ஆற்றின் கரை பகுதி உள்ளது. இந்த ஆற்றங்கரை வழியாக தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் விவசாய பணிகளுக்கு சென்று வருகின்றனர். பள்ளி மாணவ-மாணவிகளும் அந்த வழியாக சென்று வருகின்றனர். இந்த நிலையில் சமீபகாலமாக ஆற்றங்கரை பகுதியில் மதுப்பிரியர்கள் அதிகளவில் கூடி மது அருந்துகின்றனர். மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்களை பாதையில் போட்டு செல்கின்றனர். ஆற்றங்கரை பகுதி மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறி வருவதால் அந்த வழியாக பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பிரச்சினைக்கு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்