சேதமடைந்த பாலம்

Update: 2024-06-16 14:07 GMT

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தண்ணீர்பள்ளியில் இருந்து பரளி செல்லும் வழியில் காட்டு வாரி செல்கிறது. இதன் மேல் பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. பாலத்தின் வழியாக வாகனங்கள் செல்லும்போநு வாய்க்காலில் விழாமல் இருப்பதற்காக பட்டை வடிவிலான கம்பிகளைக் கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இந்த இரும்பிலான தடுப்புகள் மீது வாகனங்கள் மோதியதில் அந்த இரும்பு தடுப்புகள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பாலத்தின் வழியாக மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் செல்லும்போது வாய்க்காலில் விழுந்து விடக்கூடிய ஆபத்தான நிலை உள்ளது. எனவே சேதம் அடைந்துள்ள இரும்பிலான தடுப்புகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்