கிடப்பில் போடப்பட்ட பணி

Update: 2024-06-16 12:48 GMT

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வாணக்கன்காடு கிராமம் உள்ளது. இங்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இந்த சுகாதார நிலையத்தில் பணி செய்யும் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் தங்கும் விடுதி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வந்த நிலையில் பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்