கூடுதல் பேராசிரியர்கள் நியமிக்க வேண்டும்

Update: 2024-06-16 12:13 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள மருதன் கோன்விடுதியில் அரசு கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 700 மாணவர்கள் படித்து வருகின்றனர். கல்லூரி தொடங்கப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் இந்த கல்லூரிக்கு போதுமான பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. தற்போது 3 பேராசிரியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். தொகுப்பூதிய அடிப்படையில் கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களும் போதுமான அளவு நியமிக்கப்படவில்லை. எனவே மாணவர்களின் நலன் கருதி இந்த கல்லூரிக்கு கூடுதல் பேராசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் நியமிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்