வழிபறியை தடுக்க வேண்டும்

Update: 2024-06-16 11:59 GMT

கரூர் மாவட்டம், வெண்ணெய்மலைக்கு அருகில் உள்ள ஓட்டப்பிள்ளையார் கோவில் தெருவில் இருந்து சேலம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் வரையில் தெரு விளக்குகள் இல்லை. இதனால் இந்த பகுதியில் இரவு 7 மணிக்கு மேல் ஆட்கள் நடமாட்டம் இருக்காது. தெரு முழுவதும் இருட்டாக இருப்பதால் இரவு நேரத்தில் பணி முடிந்து வீட்டிற்கு செல்பவர்களிடமும், மோட்டார் சைக்கிளில் வருபவர்களிடம் சமூக விரோதிகள் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட வருகின்றனர். இதனை தடுக்கும் வகையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்