சேதமடைந்த ஓய்வுக்கூடம்

Update: 2024-06-16 07:18 GMT

கேசவன்புத்தன்துறை ஊரில் மீனவர்கள் ஓய்வுக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓய்வுக்கூடத்தின் மேற்கூரையில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் காணப்படுகிறது. மேலும், அந்த கட்டிடத்தின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் சேதமடைந்து காணப்படும் மீனவர் ஓய்வு கூடத்தை அகற்றி விட்டு புதிய ஓய்வு கூடத்ைத கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுசி, கேசவன்புத்தன்துறை.

மேலும் செய்திகள்