சேதமடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டிடம்

Update: 2024-06-09 15:25 GMT
செஞ்சி தாலுகா மேல்சித்தாமூரில் உள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக அலுவலக கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டு சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து வருகின்றன. இதனால் கட்டிடம் தற்போது மிகவும் பலவீனமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை சீரமைக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்