தெருநாய்கள் தொல்லை

Update: 2024-06-09 14:54 GMT

கோவையை அடுத்த சூலூர் அருகே பட்டணம் ரூபி அவென்யூ மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கூட்டமாக சுற்றி வருகின்றன. அவை அங்குள்ள வீடுகளில் வளர்க்கப்படும் கோழிகளை கடித்து கொன்று வருகின்றன. மேலும் பொதுமக்களையும் கடிக்க துரத்துகின்றன. இதனால் அவர்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே விளையாட விடவே தயங்குகின்றனர். அதுவும் இரவில் அட்டகாசம் அதிகமாக இருக்கிறது. எனவே அங்கு தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். 

மேலும் செய்திகள்