சீரமைக்கப்படுமா?

Update: 2024-06-09 07:30 GMT

நாகர்கோவில் அப்டா மார்க்கெட் எதிரில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடையின் தூண்களில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இதனால், அங்கு பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் மழைக்கு ஒதுங்கி நிற்க முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த பயணிகள் நிழற்குடையை அகற்றி விட்டு புதிய நிழற்குடையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரகாஷ், ராணித்தோட்டம்.

மேலும் செய்திகள்