பள்ளிக்கு சுற்றுச்சுவர் வேண்டும்

Update: 2024-06-02 16:46 GMT
சின்னசேலம் அருகே பூசப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இங்கு மின்விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரங்களில் மது பிரியர்கள் பள்ளி வளாகத்தில் அமர்ந்து மதுகுடித்துவிட்டு காலிபாட்டில்களை அங்கேயே வீசி விட்டு செல்கின்றனர். கோடை விடுமுறை முடிந்து விரைவில் பள்ளிகள் திறக்க உள்ளதால், மாணவர்கள் நலன் கருதி பள்ளியில் உள்ள ஆக்கிரப்பை அகற்றுவதோடு, போதிய மின்விளக்கு வசதி ஏற்படுத்தி, சுற்றுச்சுவரும் அமைத்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்