சென்னை ஆதம்பாக்கம், ஆபிசர் காலணி முதல் தெருவில் மாநகராட்சி விளையாட்டு பூங்கா உள்ளது. ஆனால் அந்த பூங்கா முழுவதும் சேதமடைந்த நிலையில் உள்ளது. போதிய அளவு மின்விளக்குகள் இல்லாமலும், சரியான பராமரி்பபு இல்லாமலும் இருக்கிறது. இந்த பூங்காவை சீரமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.