புதருக்குள் மறைந்திருக்கும் ஊர் பெயர் பலகை

Update: 2024-06-02 13:22 GMT

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகாவில் ஊட்டியாணி கிராமம் உள்ளது. கிராமத்தில் எல்லையில் உள்ள சாலையோரதில் ஊர் பெயர் பலகை வைக்கப்பட்டடது. தற்போது சாலையோரத்தில செடி,கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடப்பதால் பெயர் பலகை புதருக்குள் மறைந்த நிலையில் இருக்கிறது. இதனால் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் ஊர் பெயர் தெரியாமல் சுற்றித்திரியும் நிலை உருவாகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள ஊர் பெயர் பலகையை சுற்றியுள்ள செடி,கொடிகளை அகற்றவும், ஊர் பெயர் பலகை தெரியும்படி வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்