மின்மயானம் அமைக்கப்படுமா?

Update: 2024-06-02 11:36 GMT

கரூர் மாவட்டம் ஆண்டிபட்டி கோட்டை, ஈசநத்தம், மலைக்கோவிலூர், வேலம்பாடி, தெத்துப்பட்டி, தடாக்கோவில் உள்ளிட்ட அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் யாரேனும் இறந்து விட்டால் அந்தந்த பகுதியில் மயானம் உள்ளது. அப்பதியில் அடக்கம் செய்து விடுவது வழக்கம். ஆனால் அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏதேனும் ஒரு இடத்தில் மின் மயானம் அமைந்தால் இப்பகுதியில் யாரேனும் இறப்பு ஏற்பட்டால் குறிப்பிட்ட மின் மயானத்தில் உடலை தகனம் செய்து கொள்ளலாம். இது இப்பகுதி மக்களுக்கு உதவியாக இருக்கும். எனவே அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏதாவது ஒரு இடத்தை தேர்வு செய்து அரசு மின்மாயனம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்