காட்டுப்பன்றிகள் அட்டகாசம்

Update: 2024-05-26 16:40 GMT
பண்ருட்டி அடுத்த புதுப்பாளையம், கொங்கராயனூர், கோழிப்பாக்கம் உள்ளிட்ட பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் விவசாயிகள் மரவள்ளி, கரும்பு பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலங்களில் இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகள் புகுந்து விவசாய பயிர்களை அழித்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே அட்டகாசம் செய்யும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்