தூர்ந்துபோன ஏரி வாய்க்கால்

Update: 2024-05-26 16:38 GMT
பண்ருட்டி அடுத்த மணம்புத்தூர் அருகே ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு வரும் நீர்வரத்து வாய்க்கால் தூர்ந்துபோய் காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் ஏரிக்கு முறையாக தண்ணீர் வருவதில்லை. இதன் காரணமாக அப்பகுதியில் விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதால் பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க ஏரிக்கு வரும் நீர்வரத்து வாய்க்காலை தூர்வார வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்