சாலையோர முட்செடிகளால் விபத்து அபாயம்

Update: 2024-05-26 16:37 GMT
கிள்ளையில் இருந்து பொன்னந்திட்டு வரை செல்லும் சாலையின் இருபுறமும் முட்செடிகள் உள்ளன. இந்த முட்செடிகளின் கிளைகள் சாலையை ஆக்கிரமித்தப்படி செல்கின்றன. இதனால் சாலை தற்போது மிகவும் குறுகிபோய் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் முட்செடிகளில் சிக்கி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க சாலையோர முட்செடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்