கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

Update: 2024-05-26 12:07 GMT

திருச்சி வாசன் நகரில் பொதுமக்கள் பலர் வசித்து வருகின்றனர். இங்குள்ள சாலையோரங்களில் கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. மேலும் இவை அங்குள்ள வடிகால்களை அடைப்பதால் மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல முடியாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கின்றன. இதனால் தேங்கி நிற்கும் தண்ணீரிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே கருவேல மரங்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்