நாய்கள் தொல்லை

Update: 2024-05-26 08:57 GMT

நாகர்கோவில் முதன்மை கல்வி அதிகாரி அலுவலக சாலையில் ஒரு தனியார் பயிற்சி மையம் உள்ளது. இந்த மையத்திற்கு செல்வதற்காக ஏராளமான மாணவ-மாணவிகள் கலைமகள் தெரு வழியாக சென்று வருகின்றனர். ஆனால், இந்த தெருவில் நாய்கள் சுற்றித்திரிவதுடன், நடந்து செல்லும் மாணவிகளை விரட்டுவதும், கடிக்கவும் முயற்சித்து வருகிறது. இதனால், மாணவிகள் ஒருவித அச்சத்துடனேயே அந்த தெருவை கடந்து செல்கின்றனர். எனவே, மாணவிகள் நலன்கருதி கலைமகள் தெருவில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜூ, நாகர்கோவில்.

மேலும் செய்திகள்