காட்சி பொருளான அங்கன்வாடி மையம்

Update: 2024-05-12 18:18 GMT
புவனகிரி அருகே வானமாதேவி ஊராட்சி கட்டாரச்சாவடி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடம் பல ஆண்டுகளாக பயன்பாடின்றி பூட்டி கிடந்தது. இதையடுத்து அதனை செயல்பாட்டுக்கு கொண்டுவர கட்டிடத்தை சீரமைத்து வர்ணம் பூசப்பட்டது. இந்த பணிகள் முடிந்து நீண்ட நாட்கள் ஆனபிறகும் அங்கன்வாடி மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அந்த கட்டிடம் தற்போது காட்சி பொருளாக இருந்து வருகிறது. எனவே அந்த கட்டிடம் சேதமடைந்து வீணாவதற்கு முன் அதனை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.

மேலும் செய்திகள்