மழைநீர் வடிகால் கால்வாய் பணி விரைந்து முடிக்கப்படுமா?

Update: 2024-05-05 12:39 GMT
திருச்சி மாவட்டம். லால்குடி தாலுகா புள்ளம்பாடி பகுதியில் தேசிய நெடுஞ்சாலை சார்பாக மழைநீர் வடிகால் கால்வாய் கட்டுமான பணிகள் கடந்த 6 மாதத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. தற்போது அந்தப் பணிகள் தொடர்ச்சியாக நடைபெறாமல்இடைவெளி விட்டு நடைபெற்று வருகிறது. இதனால் குடியிருப்பு வாசிகள் வீட்டிலிருந்து வெளியில் வருவதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் பணிகள் மந்தமாக நடந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வடிகால் கால்வாய் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்