ஆம்புலன்ஸ் வசதி வேண்டும்

Update: 2024-05-05 11:48 GMT
பொன்னமராவதி தாலுகா காரையூர் அருகே உள்ள மேலத்தானியம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.மேலத்தானியம் சுற்றுவட்டார கிராமங்களில் பொது மக்கள் அவசர காலங்களில் மருத்துவமனை செல்வதற்கு போதிய பஸ் வசதி இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.மேலும் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அவசர காலங்களுக்கு 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பொன்னமராவதி மற்றும் இலுப்பூர்ஆகிய ஊர்களில் இருந்து 108 ஆம்புலன்ஸ் வரவேண்டிய சூழல் உள்ளது. எனவே மேலத்தானியம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 108 ஆம்புலன்ஸ் வழங்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்