மதுப்பிரியர்கள் அட்டகாசம்

Update: 2024-04-28 16:32 GMT
சிதம்பரம் பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாக கட்டிடங்களின் மாடி படிக்கட்டுகள் மற்றும் மேற்கூறைகள் மீது மதுப்பிரியர்கள் அமர்ந்து தினமும் மது குடிக்கின்றனர். பின்னர் காலி மதுபாட்டில்களை அங்கேயே போட்டு உடைப்பதோடு, பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளிடம் தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். பயணிகள் பேருந்து நிலையத்தில் நிற்கவே பெரும் அச்சமடைந்து வருகின்றனர். இதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்