பயணியர் நிழற்குடை அமைக்கப்படுமா?

Update: 2024-04-28 16:29 GMT
திண்டிவனம் தில்லையாடி வள்ளியம்மை நகரில் பேருந்து நிறுத்தம் உள்ளது. ஆனால் இங்கு பயணிகள் நிழற்குடை இல்லை. தற்போது கோடை வெயில் கொளுத்தி வருவதால் அப்பகுதி மக்கள் கடும் வெயிலில் கால் கடுக்க காத்திருந்து பஸ் ஏறி செல்வதால் அவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அங்கு பயணிகள் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்