சிதிலமடைந்த அரசு கட்டிடம்

Update: 2024-04-28 16:03 GMT

திண்டுக்கல்லில், பழனி பைபாஸ் சாலையில் செயல்பட்டு வரும் பட்டு உற்பத்தி அலுவலகம் சிதிலமடைந்து காணப்படுகிறது. இதில் கட்டிடத்தின் சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளது. விபத்து ஏற்படும் முன்பு சேதமடைந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிதாக கட்டிடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்