நடவடிக்கை தேவை

Update: 2024-04-28 09:08 GMT

நாகர்கோவில் பார்வதிபுரத்தில் இருந்து ஆசாரிபள்ளத்துக்கு வரும் சானல்கரை சாலையில் ஒரு கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் எதிேர சாலையின் ஒரு பகுதியில் கேரள பதிவெண் கொண்ட ஒரு கார் பல மாதங்களாக கேட்பாரற்ற நிலையில் நிற்கிறது. இதன்காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிற்கும் காரை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்