சரிசெய்யப்பட்டது

Update: 2024-04-28 09:02 GMT

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட குஞ்சன்விளை, பரப்புவிளை, வெள்ளாளன்விளை ஊர்களுக்கு குடிநீர் வழங்கும் ஆழ்துளை கிணறு குஞ்சன்விளை வடக்கு பகுதியில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியை சேர்ந்த சிலர் குப்பைகளை இந்த ஆழ்துளை கிணற்றின் அருகில் கொட்டி வந்தனர். இதனால், அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டதுடன், குடிநீர் மாசடையும் நிலை ஏற்பட்டது. இதுபற்றி ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதைதொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆழ்துளை கிணறு அருகில் கிடந்த குப்பைகளை அகற்றியதுடன், கிணற்றை சுற்றி சுவர் எழுப்பி பாதுகாப்பு வசதி ஏற்படுத்தினர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அந்த பகுதி மக்கள் நன்றியை தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்