புவனகிரி அருகே பின்னலூரில் உள்ள சித்தேரி தூர்ந்து போய் காணப்படுகிறது. மேலும் ஏரியில் அதிக அளவில் முட்செடிகள் ஆங்காங்கே வளர்ந்து நிற்கின்றன. இதனால் மழைக்காலங்களில் ஏரியில் அதிக அளவில் தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே ஏரியை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.