சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்

Update: 2024-04-21 11:13 GMT

கரூர் -சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பாலத்துறை அருகே வாத்து கறி விற்பனை செய்யும் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் சேலம் -கரூர், கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் செல்லும் வாகன ஓட்டிகள், பல்வேறு ஊர்களில் இருந்து வருபவர்கள் இந்த பகுதிகளுக்கு வந்து சமைத்த வாத்துக்கறியையும், சமைக்காத வாத்துக்கறியையும் வாங்கி செல்கின்றனர். இதன் காரணமாக ஏராளமான வாத்துக்களை அறுத்து இறைச்சியாக்கி விற்பனை செய்து வருகின்றனர். இதனால் இந்த வாத்துக்களில் இருந்து அகற்றப்படும் கழிவுகளை தார் சாலையின் ஓரத்தில் தினமும் கொட்டி வருகின்றனர். இதனால் தார் சாலை வழியாக செல்லும் போது கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுவதுடன், நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்