குளத்தை தூர்வார வேண்டும்

Update: 2024-04-21 09:05 GMT

காட்டாத்துறை பேரூராட்சிக்கு உட்பட்ட வெள்ளிகோடு பகுதியில் குளம் உள்ளது. இந்த குளத்தை அந்த பகுதியில் உள்ள மக்கள் பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்த குளம் தூர்வாரப்படாமல் செடி கொடிகள் வளர்ந்து காணப்படுவதுடன் தண்ணீரும் மாசடைந்து துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செடி, கொடிகளை அகற்றி குளத்தை தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்