நாய்கள் தொல்லை

Update: 2024-04-14 16:24 GMT

ஆண்டிப்பட்டி தாலுகா ராஜக்காப்பட்டி பகுதியில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை அந்த வழியாக செல்பவர்களை கடிப்பதற்காக துரத்துகின்றன. இதனால் பெற்றோர்கள், தங்களது குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே அனுப்பவே அச்சப்படுகின்றனர். மேலும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் தெருநாய்கள் துரத்துகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்