கால்நடை மருந்துகள் தட்டுப்பாடு

Update: 2024-04-14 11:32 GMT

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி விவசாயம் நிறைந்த பகுதியாகும். கிராமப்புறங்களில் ஏராளமானோர் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். பலருக்கு கால்நடை வளர்பே வாழ்வாதாரமாக உள்ளது. ஆனால் கறம்பக்குடியில் உள்ள கால்நடை மருத்துவமனையில் போதிய மருந்து மாத்திரைகள் இல்லை. இதனால் கால்நடை வளர்ப்போர் பெரும் சிரமப்படுகின்றனர். உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாததால் ஆடு, மாடுகள் நோய் தாக்கி பலியாகும் நிலை உருவாகிறது. எனவே கறம்பக்குடி அரசு கால்நடை மருத்துவமனையில் போதிய மருந்துகள் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்