மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி எப்போது கட்டப்படும்

Update: 2024-04-07 17:49 GMT
நெய்வேலி அருகே பேர்பெரியான்குப்பம் டாக்டர் அம்பேத்கர் தெருவில் பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இடித்து அகற்றப்பட்டது. அதன் பின்னர் அங்கு புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் குடிநீருக்காக அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு காலி குடங்களுடன் அலைந்து திரிந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்