முட்செடிகள் அகற்றப்படுமா?

Update: 2024-04-07 17:46 GMT
சேத்தியாத்தோப்பு வெள்ளாற்றில் முட்செடிகள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. சில இடங்களில் ஆறு இருப்பது தெரியாத அளவுக்கு முட்செடிகள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளன. இதனால் மழைக்காலங்களில் ஆற்றில் தண்ணீர் சீராக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆற்றின் கரை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே ஆற்றில் வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி