தூர்ந்துபோன ஏரி

Update: 2024-04-07 17:25 GMT
பிரம்மதேசம் அருகே குளத்தூர் ஏரி தூர்ந்துபோய் காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் ஏரியில் அதிக அளவில் தண்ணீர் சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க தூர்ந்துபோன ஏரியை உடனே தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்