கழிப்பறை பயன்பாட்டிற்கு வருமா?

Update: 2024-04-07 17:15 GMT

வருசநாடு பஸ்நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட கழிப்பறை 2 வருடங்களாகியும் மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் அவசர தேவைக்காக கழிப்பறையை பயன்படுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து அதனை முறையாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்