பாதுகாப்பற்ற நிழற்குடை

Update: 2024-04-07 08:25 GMT

 மார்த்தாண்டம் மேம்பாலத்தில் நாகர்கோவில் மார்க்கம் செல்லும் பயணிகளுக்கான பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிழற்குடை அந்த வழியாக சென்ற கனரக வாகனங்கள் உரசியதில் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் நிழற்குடை சாலையில் உள்நோக்கி அமைந்துள்ளதால் பயணிகள் நிற்பது ஆபத்தான நிலையில் உள்ளது. பாலத்தில் போதிய அளவு பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் இருக்கிறது. இதனால், நிழற்குடையில் காத்திருக்கும் பயணிகள் வேகமாக வரும் வாகனத்தால் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்து நிழற்குடை அகற்றி விட்டு இடத்தை ஆய்வு செய்து பயணிகளுக்கு பாதுகாப்பாக புதிய நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.   

மேலும் செய்திகள்